அடைமழை இரவு; அதிலொரு கனவு
எனைமட்டும் உயிராய் நினைந்திடும் உறவு;
தனிமையில் நிலவு; தவித்திடும் பொழுது
துணையென பொழியும் கருணையும் அழகு
குழந்தையின் சிரிப்பாய் குளிர்ந்திடும் மனது
பொழிந்திதும் அழகில் மகிழ்ந்திடும் இரவு
கொடுந்தண லதனில் புழுங்கிடும் பொழுது
கடுங்குளிர் வழங்கும் துளிகளும் இனிது
நெடுந் தனிமைகளைக் களைந்திட விழைந்து
உறவெனப் புகுந்தாய் உயிருக்குள் நுழைந்து
மழை கண்டவுடனே மேகங்கள் கொண்டு
அகம் மறைத்திடுமே முழுமதி விரைந்து
உனைக் கண்டவுடனே விரல்களும் குவிந்து
முகம் மறைத்திடுமே வெட்கத்தில் குனிந்து
பிரிவென்ப தொன்று நிகழ்வதன் கருத்து
உறவென்ப ததனைப் புதுப்பிக்கும் பொருட்டு
மழையொழிந்த பின்னும் ஒளிர்ந்திடும் நிலவாய்
உன் நினைவுகளுடனே நிறைந்திடும் மனது !!!!
- கவிஞர் டாக்டர். இராஜலட்சுமி இராகுல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்

பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்

டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி!

சிஜேபி நடத்தும் போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்பு - புகைப்படங்கள்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



