அடைமழை இரவு; அதிலொரு கனவு
எனைமட்டும் உயிராய் நினைந்திடும் உறவு;
தனிமையில் நிலவு; தவித்திடும் பொழுது
துணையென பொழியும் கருணையும் அழகு
குழந்தையின் சிரிப்பாய் குளிர்ந்திடும் மனது
பொழிந்திதும் அழகில் மகிழ்ந்திடும் இரவு
கொடுந்தண லதனில் புழுங்கிடும் பொழுது
கடுங்குளிர் வழங்கும் துளிகளும் இனிது
நெடுந் தனிமைகளைக் களைந்திட விழைந்து
உறவெனப் புகுந்தாய் உயிருக்குள் நுழைந்து
மழை கண்டவுடனே மேகங்கள் கொண்டு
அகம் மறைத்திடுமே முழுமதி விரைந்து
உனைக் கண்டவுடனே விரல்களும் குவிந்து
முகம் மறைத்திடுமே வெட்கத்தில் குனிந்து
பிரிவென்ப தொன்று நிகழ்வதன் கருத்து
உறவென்ப ததனைப் புதுப்பிக்கும் பொருட்டு
மழையொழிந்த பின்னும் ஒளிர்ந்திடும் நிலவாய்
உன் நினைவுகளுடனே நிறைந்திடும் மனது !!!!
- கவிஞர் டாக்டர். இராஜலட்சுமி இராகுல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை கள்ளழகர் எழுந்தருளல்! அநகாரிக செயல்களில் ஈடுபடுவோர் உடனடி கைது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
ஃபால் - 2 போஸ்டர்!

தமிழகத்தில் திமுக, கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மற்ற மாநிலங்களில்? கார்கே பேட்டி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


