ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அந்தமானில் மேலடுக்கு சுழற்சி: வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு

அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :13 ஏப்ரல் 2017, 8:55 pm

DIN

அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்தமான் கடல்பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவானதால் தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஈரோடு மாவட்டம் தாளவாடியில் 20 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், நீலகிரி மாவட்டம் கேத்தி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 10 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
இந்நிலையில் அந்தமானில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியது:
தென்கிழக்கு அந்தமான் மற்றும் தெற்கு வங்கக் கடலை ஒட்டியுள்ள பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலைகொண்டுள்ளது.
ஆனால் இந்த மேலடுக்கு சுழற்சியானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறினால், கிழக்கு மத்திய திசையில் நகர்ந்து மியான்மரை நோக்கி நகரும்.
அப்போது தமிழகப் பகுதியில் இருந்து ஈரப்பதத்தையும் ஈர்த்துச் சென்றுவிடும். இதன் காரணமாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்றனர்.
8 இடங்களில் சதம்: வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 108 டிகிரி பதிவானது.
வெள்ளிக்கிழமையைப் பொருத்தவரை வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும். வெப்பத்தின் தாக்கமானது தொடர்ந்து அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்)

கரூர் பரமத்தி 108
வேலூர், திருப்பத்தூர், சேலம் 104
மதுரை, தருமபுரி 103
திருச்சி, பாளையங்கோட்டை 102
கோவை 99
சென்னை 96

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.