இலங்கை ஜெயராஜுக்கு கம்பர் விருது: பிரபல பேச்சாளர்களுக்கும் தமிழக அரசு விருதுகள்

இலங்கை ஜெயராஜுக்கு தமிழக அரசு சார்பில் கம்பர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரபல பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கும் விருது வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இலங்கை ஜெயராஜுக்கு கம்பர் விருது: பிரபல பேச்சாளர்களுக்கும் தமிழக அரசு விருதுகள்

இலங்கை ஜெயராஜுக்கு தமிழக அரசு சார்பில் கம்பர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரபல பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கும் விருது வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு முன் தமிழ் வளர்ச்சிக்கான விருதுகள் ஐந்து மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் புதியதாக 55 விருதுகள் அறிவிக்கப்பட்டன.
2016-ஆம் ஆண்டுக்கான சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள், 2015-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகளுக்கான விருதாளர்கள் அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2016-ஆம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது, சிறந்த தமிழ் அமைப்பான மாணவர் மன்றத்துக்கு வழங்கப்படுகிறது. பிற விருதுகள் பெறுவோரின் பெயர் விவரம்:-
கம்பர் விருது - இலங்கை ஜெயராஜ்
கபிலர் விருது - முனைவர் இல.க.அக்னிபுத்திரன்
இளங்கோவடிகள் விருது - நா.நஞ்சுண்டன்
உ.வே.சா. விருது - முதுமுனைவர் ம.அ.வேங்கடகிருஷ்ணன்
சொல்லின் செல்வர் விருது - பி.மணிகண்டன்
ஜி.யு.போப் விருது - வைதேகி ஹெர்பர்ட்
உமறுப்புலவர் விருது - முனைவர் தி.மு.அப்துல் காதர்
அம்மா இலக்கிய விருது - ஹம்சா தனகோபால்
ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
மொழிபெயர்ப்பாளர் விருது - நாகலட்சுமி சண்முகம், முனைவர் அ.ஜாகிர் உசேன், அல்லா பிச்சை என்ற முகம்மது பரிஸ்டா, உமா பாலு, முனைவர் கா.செல்லப்பன், வி.சைதன்யா, சி.முருகேசன், கு.பாலசுப்பிரமணியன், ச.ஆறுமுகம்பிள்ளை, முனைவர் கே.எஸ்.சுப்பிரமணியன்.
2015 ஆம் ஆண்டுக்கான முதல்வர் கணினித் தமிழ் விருது -
செ.முரளி என்ற செல்வ முரளிக்கு அளிக்கப்படும்.
இந்த விருதுகளைப் பெறும் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக ரூ.1 லட்சமும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதிச் சான்று, பொன்னாடை வழங்கப்படும். தமிழ்த்தாய் விருது பெறும் தமிழ் அமைப்புக்கு விருதுத் தொகையாக ரூ.5 லட்சமும், கேடயம், பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்படும்.
தமிழ்ச் செம்மல் விருதுக்கு, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒருவர் என்ற வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம்:
சென்னை- வேம்பத்தூர் எம். கிருட்டிணன், திருவள்ளூர்- மா.கி.இரமணன், காஞ்சிபுரம்- கூ.மு.துரை என்ற கவிஞர் கூரம் துரை, வேலூர்- வி.பத்மநாபன் என்ற புலவர் வே.பதுமனார், கிருஷ்ணகிரி- ந.நாகராசன், திருவண்ணாமலை- பா.இந்திரராசன், விழுப்புரம்- கவிஞர் பெ.ஆராவமுதன், கடலூர்- முனைவர் அரங்க.பாரி, பெரம்பலூர்- செ. சுந்தரம் (எ) வெண்பாவூர் செ. சுந்தரம், அரியலூர்- ம. சோ. விக்டர், சேலம்- கவிஞர் பி. வேலுசாமி, தருமபுரி- தகடூர். வனப்பிரியனார் என்கிற கா. ராமசந்திரன், நாமக்கல்- புலவர் மா. சின்னு, ஈரோடு- முனைவர் ச.சந்திரகுமாரி, கரூர்- ச. வரதசிகாமணி, கோயம்புத்தூர்- முனைவர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன், திருப்பூர்- ஆ. முருகநாதன், நீலகிரி- மணி அர்ச்சுனன், திருச்சிராப்பள்ளி- பேரா. தி.வெ. இராசேந்திரன், புதுக்கோட்டை- ஞானாலயா பா. கிருட்டினமூர்த்தி, சிவகங்கை- தி.அனந்தராமன், தஞ்சாவூர்-புலவர் தங்கராசு, திருவாரூர்- வீ.இராமமூர்த்தி, நாகப்பட்டினம்- செ. செய்யது முகம்மது கலிபா சாகிப், ராமநாதபுரம்- ஜெகாதா, மதுரை - திருக்குறள் செம்மல் ந. மணிமொழியன், திண்டுக்கல்- மா. பெரியசாமி (எ) தமிழ்ப் பெரியசாமி, தேனி- தமிழாசிரியர் ப. பாண்டியராசன், விருதுநகர்- முனைவர் கா.இராமச்சந்திரன், திருநெல்வேலி- முனைவர் கேப்டன் பா.வேலம்மாள், தூத்துக்குடி- கா.அல்லிக்கண்ணன், கன்னியாகுமரி - முனைவர் சிவ. பத்மநாபன்.
தமிழ்ச்செம்மல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் 25,000- பாராட்டுரை மற்றும் பொன்னாடை வழங்கப்படும்.
இன்று விருது: தமிழறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள விருதுகள் அனைத்தும், தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.25) நடைபெறும் நிகழ்வில் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com