ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

சட்ட விரோத குடிநீர்-கழிவுநீர் இணைப்பு: சென்னையில் அபராத தொகையை உயர்த்தும் சட்ட மசோதா அறிமுகம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத குடிநீர், மின்சாரம், கழிவு நீர் இணைப்புகள் இருந்தால் அவற்றுக்கான அபராதத் தொகையை உயர்த்தும் சட்ட மசோதா பேரவையில் திங்கள்கிழமை

Published On :

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத குடிநீர், மின்சாரம், கழிவு நீர் இணைப்புகள் இருந்தால் அவற்றுக்கான அபராதத் தொகையை உயர்த்தும் சட்ட மசோதா பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவானது, சென்னை மாநகராட்சி சட்டத்தைத் திருத்துவதற்கு வழிவகை செய்கிறது. இந்த சட்ட மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை மாநகராட்சி ஆணையாளரின் அனுமதியின்றி மாநகரகத்தில் மின்கம்பிகள், குழாய், வடிகால் அல்லது கால்வாய் ஆகிய எதனுடனும் இணைப்பு செய்ய மாநகராட்சி சட்டப் பிரிவு 191 ஆம் பிரிவு தடை செய்கிறது. மேலும், வளாகங்களின் உரிமையாளர்கள, குடியிருப்பாளர்கள் தெருக்களில் கழிவுநீர் விடப்படுவதைத் தடை செய்கிறது. இந்த சட்டவிதிமுறைகளை மீறுகிறவர்களுக்கு அபராதத் தொகைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த சட்டவிரோதச் செயல்களை நடப்பதைத் திறம்பட தடுக்கும் பொருட்டு, 191 மற்றும் 202 (5) ஆகிய சட்டப் பிரிவுகளில் உள்ள அபராதத் தொகைகளை அதிகப்படுத்துவதென முடிவு செய்துள்ளது. அதன்படி...
சாதாரண கட்டடம்: குடியிருப்பாக இருந்தால் ரூ.5 ஆயிரம், வணிக நோக்கத்துக்கான கட்டடம் எனில் ரூ.10 ஆயிரம்.
சிறப்புக் கட்டடம்: குடியிருப்பு எனில் ரூ.25 ஆயிரம், வணிக நோக்கக் கட்டடம் எனில் ரூ.50 ஆயிரம்.
பல அடுக்குமாடிக் கட்டடம்: பல அடுக்கு மாடி குடியிருப்பாக இருந்தால் ரூ.1 லட்சம், வணிக நோக்கக் கட்டடம் ரூ.2 லட்சம் என்ற வகையில் அபராதத் தொகைகள் உயர்த்தப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.