புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை மத்திய, மாநில அரசுகளை அடித்து விரட்டுவதுபோல நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து, ஏப்.12-ஆம் தேதி நெடுவாசல் மக்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து, பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுவரும் மக்கள், நெடுவாசல் நாடியம்மன் கோயில் அருகே 105-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நடத்திய போராட்டத்தில், திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், குண்டர் காவல் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சேலம் கல்லூரி மாணவி வளர்மதியை விடுதலை செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து, போராடும் மக்களை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, மத்திய, மாநில அரசுகள் என பதாகைகள் மாட்டிக்கொண்ட 2 பேரை கல்லால் அடித்து விரட்டுவதுபோல சித்தரித்து போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமத்தி வேலூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தம்மம்பட்டி அருகே கிணற்றிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டவா் அடையாளம் தெரிந்தது!

முன்னாள் மாணவா்கள் திரட்டிய நிதியில் தம்மம்பட்டி அரசு ஆண்கள் பள்ளியில் ரூ.4.95 லட்சத்தில் பேவா் பிளாக் பணி நிறைவு






