பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் 119 பேர் கைது

ஹைட்ரோ கார்பன் எரிவாயுத் திட்டத்துக்கு எதிராக, கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் 119 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:39 pm IST

ஹைட்ரோ கார்பன் எரிவாயுத் திட்டத்துக்கு எதிராக, கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் 119 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாள்களாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவை பாரதியார் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பாக மாணவ, மாணவியர் 200-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பேரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, வடவள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, மாணவர்களுடன் பல்கலைக்கழக நிர்வாகத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டவில்லை. இதையடுத்து, பிற்பகல் 1 மணி அளவில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 119 மாணவர்களை வடவள்ளி காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.