தமிழகத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படும் என வலங்கைமானில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய வாகை சந்திரசேகர் கூறினார்.
வலங்கைமான் மேற்கு, கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் திமுக பொதுக் கூட்டம் வலங்கைமான் கடை வீதியில் அண்மையில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் தலைமை வகித்தார். மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வாகை சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியது:
மொழி, இனம், கலாசாரம் ஆகியவற்றை திமுக தொடர்ந்து காத்துவருகிறது. தமிழகத்தில் இசை நாற்காலியில் உட்காருவதைப்போல் முதலமைச்சர்கள் மாறிமாறி உட்கார்ந்து வருகிறார்கள். தமிழகத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஆட்சிமாற்றம் ஏற்படும் என்றார்.
கூட்டத்தில், ஒன்றியச் செயலாளர்கள் தெட்சிணாமூர்த்தி (கிழக்கு), வீ.அன்பரசன் (மேற்கு), இளைஞர் அணி தலைவர் செல்லையன், மகளிர் அணி துணை அமைப்பாளர் பவானி, நகரச் செயலாளர் சிவநேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து

கந்துலா சுலோச்சனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


