

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன் கூறினார்.
அதிமுகவிலிருந்து விலகிய நிர்மலா பெரியசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியில் செவ்வாய்கிழமை இணைந்தார்.
கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, மாஃபா கே.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியது:
ஆர்.கே.நகர் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகிறோம். அந்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும். ஜெயலலிதா அறிவித்த திட்டங்களில் நிறைவேற்றாத திட்டங்களும் இதிலும் இடம்பெறும். பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.