தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

கல்லீரல்-கணைய பாதிப்பு அறிகுறிகள் முன்கூட்டியே தெரியாது: நிபுணர்கள் தகவல்

கல்லீரல், கணைய பாதிப்பு அறிகுறிகள் முன்கூட்டியே தெரியாது என்று சென்னை மியாட் மருத்துவமனையின் கல்லீரல்-கணைய பாதிப்பு சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்தனர்.

Updated On :18 ஆகஸ்ட் 2018, 9:16 pm


கல்லீரல், கணைய பாதிப்பு அறிகுறிகள் முன்கூட்டியே தெரியாது என்று சென்னை மியாட் மருத்துவமனையின் கல்லீரல்-கணைய பாதிப்பு சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்தனர்.
கல்லீரல், கணையத்தை பாதிக்கும் நோய்கள், நவீன பரிசோதனை முறைகள், நவீன சிகிச்சை முறைகள் குறித்த 
இரண்டு நாள் கருத்தரங்கம் சென்னை மியாட் மருத்துவமனையில் சனிக்கிழமை தொடங்கியது. இதை முன்னிட்டு மியாட் மருத்துவமனையின் கல்லீரல் மாற்று சிகிச்சைப் பிரிவு இயக்குநர் டாக்டர் ஆர்.சுரேந்திரன், இரைப்பை-குடல் மருத்துவப் பிரிவு இயக்குநர் டாக்டர் ஏ.முரளி, மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:-
கல்லீரல், கணைய பாதிப்புகளுக்கு வாழ்க்கை முறையே முக்கிய காரணம். ரத்தத்தில் கொழுப்புச் சத்து சேருதல், மதுப்பழக்கம், புகைப்பழக்கம், ஹெபடைடிஸ் ஏ, பி, சி வைரஸ் தாக்குதல் ஆகியவை காரணமாக கல்லீரல், கணையத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். குறிப்பாக கல்லீரலில் கொழுப்புச் சத்து சேர்வதால், கல்லீரல் சுருக்க நோய் (சிர்ரோஸிஸ் ஆஃப் தி லிவர்') ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 
கல்லீரல், கணைய பாதிப்புகள் ஏற்படும் நிலையில், அறிகுறிகள் முன்கூட்டியே வெளிப்படாமல் இருக்கும்; இதனால் நோய் முற்றிய நிலையில்தான் பெரும்பாலானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். நோய் முற்றும் நிலையில் சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
சென்னை உள்பட நாட்டின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த 43 கல்லீரல், கணைய சிகிச்சை நிபுணர்கள் கருத்தரங்கின் முதல் நாளான சனிக்கிழமை பங்கேற்று, 400 இளம் மருத்துவர்களுக்கு கல்லீரல், கணைய பாதிப்புக்கு உரிய நவீன சிகிச்சை முறைகளை விளக்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.