கஜா புயலினால் களத்தில் இயங்கிய அமைச்சர்களுக்கு தமிழிசை பாராட்டு!

புயல் எச்சரிக்கை வந்த காலத்திலிருந்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்ட முதல்வருக்கும், களத்தில் இயங்கிய
கஜா புயலினால் களத்தில் இயங்கிய அமைச்சர்களுக்கு தமிழிசை பாராட்டு!
Published on
Updated on
1 min read


சென்னை: புயல் எச்சரிக்கை வந்த காலத்திலிருந்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்ட முதல்வருக்கும், களத்தில் இயங்கிய அமைச்சர்களுக்கு பாராட்டு என்றும் பாதுகாப்பு பணிகள் தொடரவேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது: 

தன் உயிரைத்துச்சமென மதித்து புயலால் திக்கப்பட்டவர்களை மீட்டெடுத்து உதவிக்கொண்டிருக்கும் பேரிடர்மேலாண்மை குழுவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கஜா புயலினால்பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நாம் அனைவரும் நம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.

கோடியக்கரைப் பகுதிக்கு மீட்புப்பணிக்குச் சென்ற விமானப்படை வீர்ர்களும் மற்றவர்களும் பாதுகாப்பாக மீட்கப்படவேண்டும் என வேண்டுகிறேன். 

கஜா புயலால் பாதித்த நாகை கடலூர் ராமநாதபுரம் தஞ்சை, திருவாரூர் பிற மாவட்டங்களில் உள்ள பாஜக நண்பர்கள் இளைஞர் அணியினர், மருத்துவ அணியினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளை தொடர்ந்து செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 

மேலும், புயல் எச்சரிக்கை வந்த காலத்திலிருந்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்ட முதல்வருக்கும், களத்தில் இயங்கிய அமைச்சர்களுக்கும் எனது பாராட்டுகள். பாதுகாப்பு பணிகள் தொடரவேண்டும் என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com