* ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் திடீரென்று வயிற்று வலியினால் வீரிட்டு அழுவார்கள். அப்பொழுது உடனடியாகப் பெருங்காயத்தை இழைத்து அல்லது பெருங்காயத்தூளைக் குழைத்துக் குழந்தையின் தொப்புளில் மற்றும் உள்ளங்கால்களிலும், கையிலும் இலேசாகத் தடவினால் உடனே அழுகையை நிறுத்திவிடுவர்.
* குழந்தைக்கு குளிர்காலத்தில் நெஞ்சு சளியாகிவிட்டால் தேங்காய் எண்ணெய்யில் சூடத்தைப் போட்டு லேசாக சூடு செய்து. சூடம் கரைந்தவுடன், அந்த எண்ணெய்யை வெதுவெதுப்பான சூட்டில் நெஞ்சிலும் காலிலும் தேய்த்தால் சளி குறையும்.
* இழைத்து கொடுக்கும் மருந்துகளான கோரோஜனை கஸ்தூரி மருந்தை இழைத்துத் தாய்ப்பாலில் கலந்து கொடுத்தால் சளியைக் கரைத்துவிடும்.
- அங்கயற்கண்ணி ராஜு