பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிலிகான் வேலி தொழில் அதிபர்களுடன் டிரம்ப் சந்திப்பு

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் சிலிகான் வேலியைச் சேர்ந்த தொழில் துறை தலைவர்களை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

News image
Updated On :15 டிசம்பர் 2016, 7:29 pm

DIN

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் சிலிகான் வேலியைச் சேர்ந்த தொழில் துறை தலைவர்களை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
"மைக்ரோசாஃப்ட்' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலின்போது, தொழில்துறைத் தலைவர்களுடன் முரண்பட்ட வகையில் கருத்துகளைத் தெரிவித்து வந்த அவர், முதல் முறையாக அவர்களைச் சந்தித்துள்ளார். நியூயார்க்கில் உள்ள "டிரம்ப் டவர்ஸ்' கட்டடத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது:
நாட்டில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், புத்தாக்கத் திட்டங்களை வகுக்கவும் ஆலோசிப்பற்காக, இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. குறிப்பாக, இங்குள்ள பணிக்குச் செல்லும் அமெரிக்கர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு நீங்கள் (தொழில் துறை தலைவர்கள்) தரும் ஆலோசனைகளை திறந்த மனதோடு கேட்பதற்கு விரும்புகிறேன். இதற்காக, எந்த நேரத்திலும் என்னை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள், எல்லை கடந்து வெளிநாடுகளில் தொழில் செய்யும்போது பல்வேறு கட்டுப்பாடுகளையும் பிரச்னைகளையும் எதிர்கொள்கின்றன. இந்தப் பிரச்னைகளைக் களைவதற்கான வழிமுறைகள் கண்டறியப்பட வேண்டும் என்றார் அவர்.
அந்தக் கூட்டத்தில், "மைக்ரோசாஃப்ட்' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, "ஆப்பிள்' நிறுவனத்தின் டிம் குக், கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைவர்கள் லாரி பேஜ், எரிக் ஸ்மித் மற்றும் ஐபிஎம், ஃபேஸ்புக், சிஸ்கோ, அமேஸான், ஆரக்கிள், இண்டெல், டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.