சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மீண்டும் ஏவுகணைகளை ஏவி வட கொரியா சோதனை

தரையிலிருந்து கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை செலுத்தி வட கொரியா வியாழக்கிழமை சோதனை நடத்தியதாக தென் கொரியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image

தரையிலிருந்து கப்பல்களைத் தாக்கி அழிக்கும் வட கொரிய ஏவுகணை (கோப்புப் படம்)

Updated On :9 ஜூன் 2017, 1:23 am IST

தரையிலிருந்து கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை செலுத்தி வட கொரியா வியாழக்கிழமை சோதனை நடத்தியதாக தென் கொரியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வட கொரியா அடையாளம் தெரியாத பல ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி பரிசோதனை நடத்தியுள்ளது. இந்த ஏவுகணைகள் தரையிலிருந்து கடலில் செல்லும் கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாக கருதப்படுகிறது. இந்த ஏவுகணை சோதனை கேங்வோன் மாகாணம் வொன்சன் நகரத்துக்கு அருகே வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனையால் தென் கொரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கண்காணிப்பு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தென் கொரியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து வாரங்களில் வட கொரியா நடத்தும் நான்காவது ஏவுகணை சோதனை இதுவாகும். ஐ.நா. மற்றும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை எச்சரிக்கைகளை மீறி வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.