விருதுநகர் மாவட்டம் திருச்சுழி எம்.ரெட்டியபட்டி, குலசேகரநல்லூர் பகுதிகளில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், எளிய அறிவியல் சோதனைகள் பயிற்சி நடந்தது. தொலைநோக்கு பார்வை, பிரச்னைகளை சமாளிக்கும் திறன், ஏன் எதற்கு எப்படி என்ற வினாக்களின் அடிப்படையில், எதையும் அணுகுதல் பற்றி பயிற்சி தரப்பட்டது. பயிற்றுனர்கள் கோபாலகிருஷ்ணன், பஸரியா, விஜயலட்சுமி, சாந்தி பயிற்சி அளித்தனர். உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் தேன்மொழி, கருப்பசாமி பார்வையிட்டனர். கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், திட்ட அலுவலர் மாடசாமி ஆலோசனை வழங்கினர். ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் ரேணுகாதேவி செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.