தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

காரியாபட்டியில் இந்தியன் வங்கி கிளை திறப்பு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இந்தியன் வங்கி கிளையை மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார். அதன்படி காரியாபட்டியில் இந்தியன் வங்கி கிளை

Updated On :20 பிப்ரவரி 2014, 7:27 pm

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இந்தியன் வங்கி கிளையை மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார். அதன்படி காரியாபட்டியில் இந்தியன் வங்கி கிளை அலுவலக துவக்க விழா திருநெல்வேலி மண்டல துணைப் பொது மேலாளர் அமுது தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் காந்திமதி, முன்னாள் துணைத் தலைவர் பழனி, கிளை மேலாளர் ஜெயபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கார்ப்பரேட் சென்னை அலுவலக துணை பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றி வங்கி அலுவல்களை துவக்கி வைத்தார். மண்டல உதவிப் பொது மேலாளர் சங்கர், வர்த்தகர் சங்க தலைவர் சுப்பையா நாடார், ஆசிரியர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், பால் கூட்டுறவு சங்கத் தலைவர் பாண்டியராஜன், நெல்லை மாவட்ட முதன்மை மேலாளர் இளவரசு உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.