சென்னை, மே. 30: பிரபல எழுத்தாளரும், சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தின் ஒய்வு பெற்ற இயக்குநருமான டாக்டர் மனசை ப.கீரன் (75) கடந்த வியாழக்கிழமை காலமானார்.
சென்னை கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ. பட்டத்துடன் தங்கப் பதக்கம் பெற்றவர். 25 வருடங்களாக சென்னை வானொலியில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். குழந்தைகள், இலக்கியம், சமூக நலம் ஆகிய தலைப்புகளில் புத்தகங்களை எழுதியுள்ளார். 1984-ல் தமிழக அரசின் கலைமாமணி விருதினைப் பெற்ற இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.