புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

சென்னை விருகம்பாக்கத்தில் ஏழாவது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :22 ஆகஸ்ட் 2017, 10:00 pm

சென்னை விருகம்பாக்கத்தில் ஏழாவது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருகம்பாக்கம் அருணாச்சலம் பிரதான சாலைப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் ஏழாவது தளத்தில் வசிப்பவர் கவிதா (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
திங்கள்கிழமை இரவு தனது வீட்டின் பால்கனியில் நின்று கொண்டிருந்த கவிதா திடீரென கீழே குதித்தார். தரைத்தளத்தில் நின்று கொண்டிருந்த காரின் மீது விழுந்து பலத்த காயமடைந்தார்.
அங்கிருந்தவர்கள் கவிதாவை மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.