மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

உழவர் உழைப்பாளர் கட்சியினர் உண்ணாவிரதம்

தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு பிரதமர் தீர்வு காணக் கோரி, உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் புதன்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

Updated On :30 மார்ச் 2017, 2:20 am

தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு பிரதமர் தீர்வு காணக் கோரி, உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் புதன்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் கு.செல்லமுத்து தலைமை வகித்தார்.
இதில், அவர் பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி நிலவி வருகிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், விவசாயிகளின் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கடந்த 15 நாள்களாக தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை முக்கியப் பிரச்னையாக கருதி பிரதமர் தீர்வு காண வேண்டும் என்றார்.
உண்ணாவிரதத்தில் கட்சியின் பொருளாளர் பாலசுப்பிரமணியம், மாநில ஆலோசகர் பாலு, மாநில துணைச் செயலாளர் ஈஸ்வரன், கோவை மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.