நாமக்கல்
நீர்நிலை உயிர்காப்பாளர்களுக்கான பயிற்சி
நீர்நிலை உயிர்காப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலக வளாகத்தில்
நீர்நிலை உயிர்காப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலக வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் அண்மையில் நடந்தது.
இந்திய பேரிடர் மேலாண்மை, மீட்பு சங்கம் சார்பில் 3 நாள்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் நாமக்கல், ஈரோடு, சேலம், சென்னை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 25 பேர் பங்கேற்றனர்.
இவர்களுக்கு நீச்சல் குளம், நீர்நிலைகளில் ஏற்படும் விபத்துகளை சிக்கியவர்களை மீட்பது, முதலுதவி செய்யும் முறை குறித்து பயிற்றுனர்கள் ஆர்.செல்வம், செபாஸ்டின் ஆகியோர் பயிற்சி அளித்தனர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் பெரியகருப்பன் சான்றிதழ் வழங்கினார்.