இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் 5 தீர்த்தங்கள் மாற்றி அமைப்பு

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் 5 தீர்த்தங்களை கோயில் நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடத்தி மாற்றியமைத்தது.

News image
Updated On :29 அக்டோபர் 2018, 1:09 am

DIN

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் 5 தீர்த்தங்களை கோயில் நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடத்தி மாற்றியமைத்தது.
இக்கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து சிவவழிபாடு நடத்தினால் காசிக்கு சென்று வந்த பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். இந்த 22 தீர்த்தங்களில் கூட்ட நெரிசலின் போது பக்தர்கள் நீராட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இங்குள்ள மகாலட்சுமி, சரஸ்வதி, சாவுத்திரி, காயத்திரி மற்றும் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள சங்கு, சக்கர தீர்த்தம் ஆகிய 6 தீர்த்தங்களை மாற்றி அமைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ரூ.30 லட்சம் செலவில் அதற்கான பணிகள் தொடங்கி முடிவடைந்தன. இதனையடுத்து இந்த 6 தீர்த்தங்களை மாற்றியமைக்க முடிவு செய்து பிள்ளையார்பட்டி சிவாச்சாரியர் பிச்சை குருக்கள் தலைமையில் சனிக்கிழமை கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்கியது. 
இந்நிலையில், தீர்த்தங்களை மாற்றக் கூடாது என அனைத்துக்கட்சிகள் சார்பில் கோயில் இணை ஆணையர் கோ.செ.மங்கையர்கரசியிடம் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  
இதனிடையே ஞாயிற்றுக்கிழமை காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை முடிந்தவுடன் 6 கலசங்களில் உள்ள புனித நீரை எடுத்துச் சென்று புதிதாக அமைக்கப்பட்டுள்ள தீர்த்தக் கிணறுகளில் ஊற்றி பக்தர்களுக்கு தீர்த்த கிணறுகளை திறந்து வைக்க வேண்டும். ஆனால் 5 கலசங்களில் மட்டும் புனித நீர் எடுத்து சென்று மஹாலட்சுமி தீர்த்தத்தை தவிர்த்து சரஸ்வதி, சாவுத்திரி, காயத்திரி மற்றும் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள சங்கு, சக்கர தீர்த்தங்களில் ஊற்றி திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் கோ.செ.மங்கையர்கரசி,  தக்கார் குமரன்சேதுபதி மற்றும் கோட்ட உதவிப் பொறியாளர் மயில்வாகனன், பேஸ்கார்கள் அண்ணாத்துரை, கலைச்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மகாலட்சுமி தீர்த்தம் திறக்காதது குறித்து இணை ஆணையர் கோ.செ.மங்கையர்கரசியிடம் கேட்ட போது அவர் கூறியது: 6 தீர்த்தக் கிணறுகளை திறக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகளை தொடங்கி விட்டோம். 
ஆனால் 6 தீர்த்தங்களையும் திறந்தால் எனக்கும் மற்ற ஊழியர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் என்பதாலும், அச்சுறுத்தல் இருப்பதாலும் முதல் கட்டமாக 5 தீர்த்தங்கள் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. உரிய பாதுகாப்புடன் மீதமுள்ள ஒரு தீர்த்தம் விரைவில் மாற்றப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.