சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

ஆழித் தேரோட்ட விழாவில் கலைநிகழ்ச்சிகள்

திருவாரூர் தியாகராஜர் கோயில் முன்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலை நிகழ்ச்சியை திரளானோர் கண்டு ரசித்தனர்.

Updated On :29 மே 2017, 5:59 am IST

திருவாரூர் தியாகராஜர் கோயில் முன்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலை நிகழ்ச்சியை திரளானோர் கண்டு ரசித்தனர்.
திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளதையொட்டி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. சன்னிதி தெரு மற்றும் கோயில் வளாகத்தில் விளையாட்டுப் பொருள்கள், அழகு சாதனப்பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனைக் கடைகள் தாற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் 2 நாள்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோயில் ராஜகோபுரம் முன்பு ஞாயிற்றுக்கிழமை கரகாட்டம், காவடியாட்டம், கட்டக்கால் ஆட்டம், புலியாட்டம், கருப்பசாமி ஆட்டம், காளியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தன. தொடர்ந்து விஜயாகண்ணன் குழுவினரின் பக்திப்பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. திங்கள்கிழமை இரவு வயலின் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் என். மாதவன் செய்திருந்தார். இதேபோல் ஆழித்தேர் கூடம் அருகே ஸ்ரீபழனியாண்டவர் கோயில் முன்பு பக்திப்பாடல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.