குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயில் சித்திரைத் திருவிழா: 19 இல் கொடியேற்றம்

திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா வியாழக்கிழமை (ஏப்.19) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா வியாழக்கிழமை (ஏப்.19) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தேர் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு இத்திருவிழா 19 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவிழா நாள்களில் தினமும் காலை, மாலையில் முருகப்பெருமான் திருவீதி உலா நடைபெறும். 25 ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 6 முதல் 7 மணிக்குள் அருள்மிகு முருகப்பெருமானின் உருகுச்சட்ட சேவையும், மாலை 5 மணிக்கு அருள்மிகு முருகப் பெருமான் தங்கச் சப்பரத்தில் சிகப்பு சாத்தி, திருநெல்வேலி மாநகருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
26 ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கு வெள்ளைச் சாத்தியும், மாலை 6 மணிக்கு பச்சை சாத்தியும் காட்சி அளித்தல் வைபவம் நடைபெறும். 28 ஆம் தேதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் பெருமான் தேருக்கு எழுந்தருளும் வைபவமும், அதைத் தொடர்ந்துத் தேரோட்டமும், 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 10.30 க்கு மேல் 11 மணிக்குள் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com