எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயில் சித்திரைத் திருவிழா: 19 இல் கொடியேற்றம்

திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா வியாழக்கிழமை (ஏப்.19) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Updated On :15 ஏப்ரல் 2018, 5:41 am IST

திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா வியாழக்கிழமை (ஏப்.19) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தேர் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு இத்திருவிழா 19 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவிழா நாள்களில் தினமும் காலை, மாலையில் முருகப்பெருமான் திருவீதி உலா நடைபெறும். 25 ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 6 முதல் 7 மணிக்குள் அருள்மிகு முருகப்பெருமானின் உருகுச்சட்ட சேவையும், மாலை 5 மணிக்கு அருள்மிகு முருகப் பெருமான் தங்கச் சப்பரத்தில் சிகப்பு சாத்தி, திருநெல்வேலி மாநகருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
26 ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கு வெள்ளைச் சாத்தியும், மாலை 6 மணிக்கு பச்சை சாத்தியும் காட்சி அளித்தல் வைபவம் நடைபெறும். 28 ஆம் தேதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் பெருமான் தேருக்கு எழுந்தருளும் வைபவமும், அதைத் தொடர்ந்துத் தேரோட்டமும், 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 10.30 க்கு மேல் 11 மணிக்குள் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.