11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

இளைஞர்களே உங்களுக்கான வாய்ப்பு... வி.ஏ.ஓ. காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை ஓரிரு நாளில் வெளியீடு!

தமிழகத்தில் காலியாகவுள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை ஓரிரு நாள்களில்

News image
Updated On :31 அக்டோபர் 2017, 10:23 am IST

தமிழகத்தில் காலியாகவுள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது. இந்தக் காலியிடங்களுக்கு தேர்வு நடத்தி ஆறு மாதங்களில் முடிவுகளை அறிவிக்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) திட்டமிட்டுள்ளது.

 விஏஓ தேர்வில் வெற்றி பெறுபவர்களில் பலர் குரூப் 1, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வேறு பணிகளுக்குச் செல்கின்றனர். இதனால், இந்தப் பதவியில் காலியிடங்கள் தொடர்ந்து ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது.

 ஓரிரு நாள்களில் அறிவிப்பு: தமிழகத்தில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ., காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த இடங்களை நிரப்பும் வகையில் எழுத்துத் தேர்வுக்கான அறிவிக்கை ஓரிரு நாளில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.