கருடனைப் போன்ற கூர்மையான கண் பார்வையைப் பெற இதைச் சாப்பிடுங்கள்!

பொதுவாக ஆரஞ்சு போன்ற புளிப்பான பழங்களில் தான் வைட்டமின் சி அதிகமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் முட்டைக்கோஸில், ஆரஞ்சு பழத்தைவிட வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது என்றால்!
கருடனைப் போன்ற கூர்மையான கண் பார்வையைப் பெற இதைச் சாப்பிடுங்கள்!

நாம் தினமும் உண்ணும் உணவில், காய் மற்றும் கனிகளுக்கு பிரதான பங்கு இருக்கிறது. அதிலும் அன்றாடம் காய்கறி சேர்க்காமல் நாம் உணவு சமைப்பதில்லை. அந்த வகையில் காய்களுக்கு, மேஜர் ரோல் உண்டு என்றே சொல்லலாம். ஒவ்வொரு காயிலும் ஒவ்வொரு விதமான சத்து உண்டு. இப்பொழுது சொல்லப்போகும் விஷயத்தைக் கேட்டால் நீங்கள் ஆச்சர்யப் படுவீர்கள்.

பொதுவாக ஆரஞ்சு போன்ற புளிப்பான பழங்களில் தான் வைட்டமின் சி அதிகமாக இருக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அநேகம் பேரால் வெறுத்து ஒதுக்கப்படும் முட்டைக்கோஸில், ஆரஞ்சு பழங்களை விட வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா? முட்டைக்கோஸில்,  தொற்று நோயை எதிர்த்துப் போராடும் சல்ஃபர் அதிக அளவில் இருப்பதால், தினமும் சிறிதளவு முட்டைக்கோஸை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எந்த வியாதியும் நம்மை அணுகாமல் பார்த்துக்கொள்ளும். 

இதில் நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கிறது. மேலும் செரிமானம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரி செய்து, அதனால் மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கிறது. உடலின் உட்பாகத்தில் சிறு கட்டிகள் தோன்றி, அதை நாம் கவனிக்காமல் போனால் அதுவே புற்று நோயாக மாறிவிடும் என்று கூறப்படுகிறது அல்லவா? முட்டைக்கோஸை சாப்பிட்டால் அம்மாதிரியான கட்டிகள் கூடக் கரைத்துவிடுகிறதாம். 

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து, தாதுகள், வைட்டமின்கள் போன்ற எல்லாமே இதில் அடங்கியிருக்கிறதாம். ஒரு கப் சமைக்கப்பட்ட முட்டைக்கோஸில், முப்பத்து மூன்று கலோரிகள் மட்டுமே இருப்பதால் உடல் எடையும் கூடாது. இந்தக் காயில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால் ரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைகக் கூடியது. ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. அதனால் ஸ்ட்ரோக், ஹார்ட் அட்டாக் பாதிப்புகள் தடுக்கப்படுகின்றன. 

கண் பார்வை கருடனைப் போல் தீட்சண்யமாக இருக்க வைப்பதோடு, காட்டராக்ட் எனப்படும் கண்புரை வருவதையும் தவிர்க்கிறது. சிலருக்கு இளம் வயதிலேயே முதுமையின் சாயல் தெரியத்தொடங்கும். தோலில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள், தோலின் நிற மாற்றம் ஆகியவைத் தோன்றத் தொடங்கும். அவை உண்டாகாமல் இருக்க முட்டைக்கோஸ் நல்ல ஒரு மருந்தாகும். 

மிக மிக முக்கியமாக அல்சீமர் என்னும் ஞாபக மறதி நோய் உள்ளவர்கள் முட்டைக்கோஸை தினமும் உணவில் சேர்த்துவந்தால், மறதி நோயிலிருந்து முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு நிவாரணம் பெறலாம் என்று மருத்துவர்களே கூறுகிறார்கள். சல்ஃபர், வைட்டமின் சி இரண்டுமே முட்டைக்கோஸில் நிறைந்திருப்பதால், இதை உண்பதன் மூலம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள், முடக்கு வாதம் இவற்றிலிருந்தும் தப்பித்துக்கொள்ளலாம். அதுமட்டுமல்ல,  பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் சத்துக்களை, இந்தக் காய் உள்ளடக்கி இருப்பதால், எலும்புகள் வலுவூட்டப்படுகின்றன. 

ஒரு சாதாரண கோஸில், எவ்வளவு மருத்துவத்தன்மைகள் இருக்கின்றன என்று பார்த்தீர்களா? அதனால் அதை உதாசீனப் படுத்தாமல், பொரியலாகவோ, கூட்டாகவோ, சாலட் ஆகவோ தினசரி உணவில் எந்த வகையிலாவது சேர்த்துக்கொள்வது நல்லது. முக்கியமாகச் சிறு வயது முதலே குழந்தைகளுக்கு முட்டைகோஸை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்துவது எதிர்காலத்தில் மிகுந்த நன்மையைத் தரும். சர்வ ரோக நிவாரணியாகச் செயல்படும் இந்த முட்டைக்கோஸ் இருக்க பயமேன்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com