நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

சென்னை மெரினா சாலை சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டது

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையிலுள்ள சிவாஜி கணேசன் சிலை இன்று அதிகாலை அகற்றப்பட்டது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:04 pm IST

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையிலுள்ள சிவாஜி கணேசன் சிலை இன்று அதிகாலை அகற்றப்பட்டது.

மெரினா கடற்கரை காமராஜர் சாலையிலுள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி சிலையை அகற்ற தமிழக அரசு முடிவு செய்தது.

ஆனால் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சிலையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அகற்றப்படும் சிலை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. ஆனால் அகற்றப்படும் சிலையை மணிமண்டபத்தில் வைக்கவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சிவாஜி கணேசன் சிலையை தற்போதைய இடத்தில் இருந்து அகற்றி அதே சாலையிலேயே கடற்கரை ஓரத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட சிலை மணி மண்டபத்தில் வைக்கப்படும் என தெரிகிறது.


 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.