மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

திருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வர ஸ்வாமி ஆலய கும்பாபிஷேகம்

தேவாரத் திருப்பதிகம் பெற்ற காவிரிக்கு தென்கரையில் 10-வது திருத்தலமாகத் திகழ்வது திருவாலம்பொழில் அருள்மிகு ஞானம்பிகை..

Updated On :3 ஜூன் 2017, 5:13 pm IST

தேவாரத் திருப்பதிகம் பெற்ற காவிரிக்கு தென்கரையில் 10-வது திருத்தலமாகத் திகழ்வது திருவாலம்பொழில் அருள்மிகு ஞானம்பிகை உடனுறை அருள்மிகு ஆத்மநாதேஸ்வர ஸ்வாமி (வடமூலேஸ்வரர்) ஆலயம். தஞ்சை மாவட்டத்தில் திருவையாற்றிலிருந்து தென் மேற்கே 5 கி.மீ தூரத்தில் குடமுருட்டியாற்றின் கரையில் உள்ளது. ஒரு காலத்தில் ஆலமரங்கள் சூழ்ந்த காட்டில் இறைவன்

அருள்பாலித்ததால் வடாரண்யேஸ்வரர் என்று இறைவனுக்குத் திருநாமம். வழிபடுவோருக்கு ஞானத்தை வழங்கி கல்வி கேள்விகளில் சிறந்திட வைக்கும். அம்பிகை என்பதால் ஸ்ரீ ஞானாம்பிகை என்று அம்மனுக்கு பெயர். சூரியன், அஷ்ட வசுக்கள் பூஜித்து பேறு பெற்ற தலம். திருநாவுக்கரசரால் பாடல் பெற்றதும், சுந்தர மூர்த்தி சுவாமிகளால் வழிபாடு செய்யப்பட்டதுமான இத்தலம் மக நட்சத்திரக்காரர்களுக்கான விசேஷ பரிகாரத்தலமாகும்.

இத்திருக்கோயிலில் திருப்பணிகள் முழுமையாக நிறைவுற்ற நிலையில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் ஜூன் 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் நடைபெறுகின்றது. இவ்வைபவத்தில் பல்வேறு மடாதிபதிகள் கலந்து சிறப்பிக்க உள்ளனர். யாகசாலை பூஜைகள் வெள்ளியன்று துவங்கியது.

-எஸ்.வெங்கட்ராமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.