மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் மலர் மாலைகள் சாற்றும் பணி!விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

ஃபார்முலா 1: ரோஸ்பெர்க் சாம்பியன்

ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்ஸிடஸ் டிரைவர் நிகோ ரோஸ்பெர்க் சாம்பியன் பட்டம் வென்றார். இது அவர் வென்ற முதல் சாம்பியன் பட்டமாகும்.

Published On :

ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்ஸிடஸ் டிரைவர் நிகோ ரோஸ்பெர்க் சாம்பியன் பட்டம் வென்றார். இது அவர் வென்ற முதல் சாம்பியன் பட்டமாகும்.
2016 சீசன் ஃபார்முலா 1 கார் பந்தயம் 21 சுற்றுகளைக் கொண்டது. இதன் கடைசிச் சுற்று அபுதாபி கிராண்ட்ப்ரீ என்ற பெயரில் அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் நிகோ ரோஸ்பெர்க் 1 மணி, 38 நிமிடம், 4.452 விநாடிகளில் இலக்கை எட்டி 2-ஆவது இடத்தைப் பிடித்ததன் மூலம் 385 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
ரோஸ்பெர்க்கின் தந்தை 34 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இப்போது ரோஸ்பெர்க் வென்றதன் மூலம் ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற தந்தை, மகன் வரிசையில் அவர் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
மெர்ஸிடஸின் மற்றொரு டிரைவான லீவிஸ் ஹாமில்டன் இந்தப் போட்டியில் முதலிடத்தைப் (1:38:04.013) பிடித்தபோதும் அவரால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை. சாம்பியன் பட்டம் வெல்வதில் ரோஸ்பெர்க், ஹாமில்டன் இடையே கடும் போட்டி நிலவியது. புள்ளிகள் பட்டியலில் ஹாமில்டனைவிட 12 புள்ளிகள் முன்னிலையில் இருந்தார் ரோஸ்பெர்க். அதனால் ஹாமில்டன் இந்தப் போட்டியில் முதலிடம் பிடிக்க வேண்டும். அதநேரத்தில் ரோஸ்பெர்க் முதல் 3 இடங்களுக்குள் வராமல் இருக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே ஹாமில்டன் சாம்பியனாக முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் ரோஸ்பெர்க் 2-ஆவது இடத்தைப் பிடித்ததால் ஹாமில்டனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.