மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை-கொல்கத்தா ஆட்டம் டிரா

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மோதிய சென்னை-கொல்கத்தா அணிகள்.

Published On :

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆட, முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 59-ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது கொல்கத்தா. இந்த கோலை ஹெல்டர் போஸ்டிகா கொடுத்த கிராஸில் சமீக் டூட்டி அடித்தார்.
இதையடுத்து அபாரமாக ஆடிய சென்னை அணி அடுத்த 7-ஆவது நிமிடத்தில் (66-ஆவது நிமிடம்) கொல்கத்தாவுக்கு பதிலடி கொடுத்தது. ஜேஜே கொடுத்த கிராஸில் ஜெயேஷ் ரானே கோலடித்தார்.
இதனால் உத்வேகம் பெற்ற சென்னை அணி 70-ஆவது நிமிடத்தில் ஹன்ஸ் முல்டர் அடித்த கோலால் 2-1 என முன்னிலை பெற்றது. இதையடுத்து ஸ்கோரை சமன் செய்யப் போராடிய கொல்கத்தா அணிக்கு 86-ஆவது நிமிடத்தில் பெனால்டி கிக் வாய்ப்பு கிடைக்க, அதில் இயான் ஹியூம் கோலடித்தார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசிக் கட்டத்தில் லால்ரின்ஸýலா செய்த தவறால் பெனால்டியை வாங்கி வெற்றியைக் கோட்டைவிட்டது.


புணே-மும்பை இன்று மோதல்

புணேவில் திங்கள்கிழமை நடைபெறும் லீக் ஆட்டத்தில் புணே சிட்டி அணியும், மும்பை அணியும் மோதுகின்றன.
புதிய கோல் கீப்பரான எடெல் பீட் வருகையால் புதிய உத்வேகம் பெற்றுள்ள புணே அணி, தலைமைப் பயிற்சியாளர் ஹபாஸ் இன்றி களமிறங்குவது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக இருந்த ஹபாஸ் விதிமுறையை மீறியதற்காக இந்த சீசனில் 4 ஆட்டங்களில் மைதானத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் புணே 2 வெற்றிகளையும், மும்பை ஒரு வெற்றியையும் பெற்றுள்ளன. ஓர் ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.