ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஜப்பான் ஓபன் காலிறுதியில் ஸ்ரீகாந்த்

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

News image
Updated On :22 செப்டம்பர் 2016, 7:13 pm

DIN

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்ரீகாந்த், சகநாட்டவரான அஜய் ஜெயராமை எதிர்கொண்டார்.
முதல் செட்டை ஸ்ரீகாந்த் 21-16 என்ற கணக்கில் வென்றிருந்த நிலையில், அஜய் ஜெயராம் கணுக்கால் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
காயம் குறித்துப் பேசிய ஜெயராம், "எனது இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் அது தீவிரமான காயமாகத் தெரியவில்லை. அதனால் சில தினங்கள் ஓய்வெடுத்துவிட்டால் கொரியா ஓபனில் விளையாடுவதற்கு தயாராகிவிடுவேன்' என்றார்.
ஸ்ரீகாந்த் தனது காலிறுதியில் ஜெர்மனியின் மார்க் ஸ்வைப்லரை சந்திக்கிறார். ஸ்வைப்லருடன் இதுவரை 3 ஆட்டங்களில் மோதியுள்ள ஸ்ரீகாந்த், அதில் 2-இல் வெற்றி கண்டுள்ளார். அதனால் ஜப்பான் ஓபன் காலிறுதியில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின்
எச்.எஸ்.பிரணாய் 16-21, 19-21 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின் விக்டர் ஆக்ùஸல்சென்னிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.