கோபிசந்த் மகளுக்கு இரட்டை சாம்பியன் பட்டம்

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஜூனியர் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவுகளிலும் இந்திய பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்தின் மகள் காயத்ரி சாம்பியன் பட்டம் வென்றார்.
Published on
Updated on
1 min read

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஜூனியர் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவுகளிலும் இந்திய பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்தின் மகள் காயத்ரி சாம்பியன் பட்டம் வென்றார்.

15 வயதுக்குள்ட்பட்டோருக்கான மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் காயத்ரி 21-11, 18-21, 21-16 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான சமியா பரூக்கியை தோற்கடித்தார்.
15 வயதுக்குள்பட்டோருக்கான மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் காயத்ரி-சமியா பரூக்கி ஜோடி 21-17, 21-15 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் கெல்லி லாரிஸா-ஷெலான்ட்ரி வியோலா ஜோடியைத் தோற்கடித்தது.
காயத்ரி, சமியா ஆகிய இருவரும் கோபிசந்த் அகாதெமியில் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com