பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

2-ஆவது டெஸ்ட்: நியூஸி. 268-க்கு ஆல்அவுட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 79.3 ஓவர்களில் 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:44 pm IST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 79.3 ஓவர்களில் 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் வியாழக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணியில் ஹென்றி நிகோலஸ் 161 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 118 ரன்கள் குவித்தார். ஆனால் எஞ்சிய வீரர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்காததால் அந்த அணி 79.3 ஓவர்களில் 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஜே.பி.டுமினி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
தென் ஆப்பிரிக்கா-24/2: பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது. காகிசோ ரபாடா 8 ரன்களுடனும், ஆம்லா ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். முன்னதாக ஸ்டீபன் குக் 3, டீன் எல்கர் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். நியூஸிலாந்து தரப்பில் டிம் செளதி, கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.