இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், சமீர் வர்மா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
தில்லியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் சமீர் வர்மா 21-17, 21-15 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் ஹன் யூவுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார்.
அதேநேரத்தில் மற்றொரு இந்தியரான ஸ்ரீகாந்த் 7-21, 12-21 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின் விக்டர் ஆக்ùஸல்ஸனிடம் தோல்வி கண்டார். இந்தியாவின் செளரவ் வர்மா, சாய் பிரணீத் ஆகியோரும் தங்களின் 2-ஆவது சுற்றில் தோற்று வெளியேறினர்.
மகளிர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் சாய்னா நெவால் 21-14, 21-12 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் போர்ன்பாவீயை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.