தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இந்திய ஓபன் காலிறுதியில் சாய்னா, சமீர்

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், சமீர் வர்மா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

News image
தாய்லாந்தின் போர்ன்பாவீக்கு எதிரான ஆட்டத்தில் சாய்னா.
Updated On :30 மார்ச் 2017, 7:16 pm

DIN

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், சமீர் வர்மா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
தில்லியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் சமீர் வர்மா 21-17, 21-15 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் ஹன் யூவுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார்.
அதேநேரத்தில் மற்றொரு இந்தியரான ஸ்ரீகாந்த் 7-21, 12-21 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின் விக்டர் ஆக்ùஸல்ஸனிடம் தோல்வி கண்டார். இந்தியாவின் செளரவ் வர்மா, சாய் பிரணீத் ஆகியோரும் தங்களின் 2-ஆவது சுற்றில் தோற்று வெளியேறினர்.
மகளிர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் சாய்னா நெவால் 21-14, 21-12 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் போர்ன்பாவீயை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.