சமீபத்தில் ட்விட்டரில் தமிழில் சில பதிவுகள் எழுதி வந்தார் ஹர்பஜன் சிங். அதன் அர்த்தம் இப்போதுதான் புரியவந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹர்பஜன் சிங்கை ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:
வணக்கம் தமிழ்நாடு. உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம். உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு என்று தமிழில் மீண்டும் பதிவு எழுதி சிஎஸ்கே ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளார்.