செய்திகள்
ஐபிஎல் ஏலம்: சரிவைக் கண்ட யுவ்ராஜ் சிங்
கடந்த 2015-ம் ஆண்டு ரூ. 16 கோடிக்குத் தேர்வான யுவ்ராஜ் தற்போது ரூ. 2 கோடிக்கு...
ஐபிஎல் போட்டிக்காக பெங்களூரில் இன்றும் நாளையும் நடைபெறும் வீரர்கள் ஏலத்தில், 361 இந்தியர்கள் உள்பட 578 வீரர்கள் களத்தில் உள்ளனர்.
ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் சிங்கை பஞ்சாப் அணி ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.
இது அவரைப் பொறுத்தவரை மிகப்பெரிய சரிவாகும். கடந்த 2015-ம் ஆண்டு ரூ. 16 கோடிக்குத் தேர்வான யுவ்ராஜ் தற்போது ரூ. 2 கோடிக்கு தேர்வாகியுள்ளது ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது.
ஏலத்தில் யுவ்ராஜ் சிங்
2014 - ரூ. 14 கோடி (பெங்களூர்)
2015 - ரூ. 16 கோடி (தில்லி)
2016 - ரூ. 7 கோடி (ஹைதராபாத்)
2018 - ரூ. 2 கோடி (பஞ்சாப்)