விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

அ.தி.மு.க. அணி வேட்பாளர்கள் மக்கள் சேவைக்காக போட்டியிடவில்லை: மு.க.ஸ்டாலின்

அதிமுகவின் இரண்டு அணிகள் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சியைக் கைப்பற்றத்தான் போட்டியிடுகிறார்களே தவிர மக்களுக்குச் சேவை செய்வதற்காக அல்ல

திமுக வேட்பாளர் என்.மருதுகணேஷை ஆதரித்து புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

Published On :

அதிமுகவின் இரண்டு அணிகள் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சியைக் கைப்பற்றத்தான் போட்டியிடுகிறார்களே தவிர மக்களுக்குச் சேவை செய்வதற்காக அல்ல என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் என்.மருதுகணேஷை ஆதரித்து ஸ்டாலின் புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, காசிமேடு பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியது: அதிமுக அணிகளின் சார்பில் போட்டியிடுபவர்கள் வெற்றி பெறுவதன் மூலம் ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றி அதிகாரம் செலுத்தி மீண்டும் முறைகேடுகளில் ஈடுபடுவதுதான் அவர்களது முக்கிய நோக்கம் ஆகும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக திமுக தொடர்ந்து எதிர்த்து வந்திருந்தாலும் அவரிடம் கண்ணியக்குறைவாகவோ, கீழ்த்தரமாகவோ நாங்கள் நடந்து கொண்டதில்லை.
ஆனால் ஜெயலலிதாவால் நீண்டகாலம் பதவியில் இருந்த ஓபிஎஸ் தற்போது ஜெயலலிதாவின் சவப்பெட்டி பொம்மையை வைத்து அரசியல் செய்யும் அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்டார்.
75 நாள்கள் மருத்துவமனையில் இருந்தபோது பன்னீர்செல்வமும்தான் உடனிருந்தார். எனவே ஜெயலலிதா மரணம் குறித்த உண்மையை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீதிவிசாரணை நடத்தப்படும்.
திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் மருதுகணேஷ் இப்பகுதியில் மக்கள் பணியாற்றுவார். அவரது செயல்பாடுகளுக்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன் என்றார் ஸ்டாலின்.
பிரசாரத்தின் போது முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, க.பொன்முடி, மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.