திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, சீதாராம் யெச்சூரி உள்பட பலர் பங்கேற்க உள்ளதாக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
ஜூன் 3-ஆம் தேதி மாலை... கருணாநிதியின் 60 ஆண்டு கால சட்டப்பேரவை வைரவிழா மற்றும் 94-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இரண்டையும் இணைத்து திமுக சார்பில் மாபெரும் விழாவாக நடத்த உள்ளோம். ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜூன் 3-ஆம் தேதி மாலை 5 மணியளவில் விழா நடைபெறும்.
தலைவர்கள் யார், யார்? அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, பிகார் முதல்வர் நிதிஷ்குமார், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் பரூக் அப்துல்லா, ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழுத்தலைவர் டெரிக் ஓ பிரைன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
மருத்துவர்கள் அனுமதித்தால் கருணாநிதி விழாவில் பங்கேற்பார்.
அரசியல் விழா இல்லை: அகில இந்திய அளவிலான தலைவர்கள் பங்கேற்பதால், குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று சொல்ல முடியாது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளர் நிறுத்துவது தொடர்பாக சோனியா
காந்தி ஏற்கெனவே தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளார். இது தொடர்பாக மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் பேசியுள்ளனர். அனைவரும் கலந்து பேசி முடிவெடுத்த பிறகுதான் பொது வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கப்படும். தற்போது நடைபெற உள்ளது கருணாநிதிக்கான விழா.
பேரவைக் கூட்டம்: மானியக் கோரிக்கை மீது விவாதம் நடத்துவதற்காக சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என்று முறையாக கடிதம் கொடுத்துள்ளோம். ஆனால், எந்தவித பதிலும் வரவில்லை. சட்டப்பேரவையைக் கூட்டினால் மெஜாரிட்டி இல்லாமல் போய்விடுமோ என்ற அச்ச உணர்வால் கூட்டத்தைக் கூட்டத் தயங்குகின்றனர். அதனால்தான் போட்டி போட்டுக் கொண்டு சென்று பிரதமரைச் சந்திக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரான் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது: டொனல்ட் டிரம்ப்

மேட்டூர் அணை கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இல்லை! விவசாயிகள் கவலை!

வெள்ளைப் பூச்சி தாக்குதலால் அழிவின் விளிம்பில் ஆம்பூா் தென்னை விவசாயம்

சட்டப் பணிகள் குழுவுக்கு தன்னாா்வலா்களாக சேர விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



