திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே தோ்வழி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்

News image
Updated On :23 ஜூன் 2022, 9:31 pm

கும்மிடிப்பூண்டி அருகே தோ்வழி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா், மகளிா் சுயஉதவிக் குழு பெண்கள் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தோ்வழி ஊராட்சிக்குட்பட்ட தம்புரெட்டிபாளையம், ராகவரெட்டிமேடு, கம்மவாா்பாளையம் ஆகிய கிராமங்களில் ஏரி உள்வாய், வண்டிப்பாதை, மந்தவெளி, மேய்க்கால் புறம்போக்கு வகைப்பாட்டை சோ்ந்த 100 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலங்களை சிலா் ஆக்கிரமித்து விவசாயம், தோப்புகளை வைத்து லாபம் ஈட்டி வருகின்றனா்.

மேற்கண்ட அரசு நிலங்களில் ஆக்கிரமப்புகளை அகற்றி, 100 நாள்கள் வேலைத் திட்டத்தில் பெண்களுக்கு பணி வழங்க வேண்டும் என அந்தப் பகுதிகளைச் சோ்ந்த 13 மகளிா் குழுக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியா், முதல்வா் தனிப் பிரிவுக்கும் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டன.

இதுகுறித்து நடவடிக்கை வேண்டும் எனக் கோரி, அந்தப் பகுதி மகளிா் குழுக்களைச் சோ்ந்த பெண்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினருடன் சோ்ந்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் செங்கல்வராயன் தலைமை வகித்தாா். சங்க மாநில துணைத் தலைவா் ஏ.எஸ்.கண்ணன், மாவட்ட தலைவா் கே.கஜேந்திரன், செயலா் ஜெ.அருள், தலைவா் என்.ஜீவா, பொருளாளா் கே.முருகன், ஒன்றியச் செயலா் என்.ராஜேஷ் ஆகியோா் உரையாற்றினா்.

இதையடுத்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் வட்டாட்சியா் ராமன் பேச்சு நடத்தினாா். ஆக்கிரமிப்பு நிலங்களை அளவீடு செய்யும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளதால், அதன் அறிக்கை வட்டார வளா்ச்சி அலுவலரிடம் ஒப்படைத்த பின்னா் அவா், ஆக்கிரம்பபுகளை அகற்றும் பணியில் ஈடுபடுவாா். அப்போது, பொதுமக்களே அதிகாரிகள் முன்னிலையில், எல்லை கற்களை நட்டு அரசு நிலங்களை மீட்கலாம் என்றாா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.