தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு நாட்டிற்கு வழிகாட்டுகிறது என்றார் மு.க. ஸ்டாலின்.

News image

திருவள்ளூர் பிரசாரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் - யூடியூப் / M.K. STALIN

Updated On :13 ஏப்ரல் 2026, 7:37 pm IST

திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது என முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 13) தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 13) பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

''தமிழ்நாடு முழுக்க பரவலாக்கப்பட்ட வளர்ச்சி பலரின் கண்ணை உறுத்துகிறது. கருணாநிதி கொடுத்த அறிவுரை உழைப்பு. உண்மையாக உழைத்தால் உலகம் நம்மை போற்றும். அவர் சொன்னதைப்போல தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கிறேன்.

தமிழ்நாடு என்ற சொல் இருக்கக் கூடாது என்பது ஆர்.என். ரவியின் குரல் அல்ல; ஆர்எஸ்எஸ்ஸின் குரல். நான் உயிரோடு இருக்கும் வரை, திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட்டுப்பார்க்கும் தைரியம் உண்டா?

திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது. தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும். என்டிஏ என்ற ஆபத்தை தடுத்து நிறுத்தக்கூடிய தேர்தல்தான் இது.

தமிழ்நாடு என்றுமே தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான். பல வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் இருந்து வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொண்டு வருகின்றனர். தங்கள் மாநிலத்தில் இதுபோன்ற வாய்ப்புகள் இல்லை என்று அவர்கள் கூறும் அளவுக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சியும் வாய்ப்பும் உள்ளது.

ஆனால், வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என பிரதமர் மோடி தொடர்ந்து பொய் கூறி வருகிறார். 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு எப்படிப்பட்ட தலைகுனிவை சந்தித்தது என எண்ணிப்பாருங்கள்.

அதிமுக ஆட்சி தமிழ்நாட்டின் இருண்டகாலம். தவறுகளுக்காக தமிழ்நாட்டை பாஜகவிடம் பழனிசாமி விட்டுக்கொடுத்துவிட்டார். தவறுகளில் இருந்து தப்பிக்க மாநிலத்தின் நலனை அடகுவைத்துவிட்டார். அத்தகைய பழனிசாமிக்கு 11வது தோல்வியை கொடுக்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் வளர்ச்சி நின்றுபோனது. இன்று 11.17% தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது.

எத்தனை முறை அடித்துக்கேட்டாலும் சாதனைகளைச் சொல்லி அவர்களால் வாக்கு கேட்க முடியாது. பாஜகவின் கிளைக் கழகம்தான் அதிமுக. வெல்வோம் ஒன்றாக. தமிழ்நாடு வெல்லட்டும்'' என மு.க. ஸ்டாலின் பேசினார்.

Summary

TN Election 2026 Danger to Tamil Nadu from the North: M.K. Stalin campaign

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.