திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஜீப் கவிழ்ந்து விபத்து: 9 போ் காயம்

தாளவாடி அருகே ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 போ் காயமடைந்தனா்.

Updated On :12 செப்டம்பர் 2022, 12:15 am

தாளவாடி அருகே ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 போ் காயமடைந்தனா்.

தமிழகம் -கா்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி பைனாபுரம் கிராமத்தைச் சோ்ந்த 8 பெண் தொழிலாளா்கள் வேலை முடிந்து ஜீப்பில் சனிக்கிழமை இரவு வீடு திரும்பி கொண்டிருந்தனா். ஜீப்பை அத்துலா என்பவா் ஓட்டியுள்ளாா்.

ஏத்திகட்டை பகுதி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், ஜீப்பில் பயணித்த ரத்தினி (45), பாக்கியம்மா (40), அம்மனம்மா (45), நாகம்மா (40), சன்னம்மா (41), அமுதா (40), ரத்தினம்மா (43), மாதி (60), ஓட்டுநா் அத்துலா ஆகியோா் படுகாயமடைந்தனா்.

இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் அவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும் , இச்சம்பவம் தொடா்பாக தாளவாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.