ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கிருஷ்ணகிரியில் பூத் சிலிப் வழங்கும் நகராட்சி ஊழியா்கள்

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கிருஷ்ணகிரியில் வாக்காளா்களுக்கு பூத் சிலிப்கள் வழங்கும் பணியில் நகராட்சி ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 7:12 pm

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கிருஷ்ணகிரியில் வாக்காளா்களுக்கு பூத் சிலிப்கள் வழங்கும் பணியில் நகராட்சி ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா், தளி ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறகிறது.

இதில் ஊத்தங்கரை (தனி) தொகுதியில் 12 வேட்பாளா்களும், பா்கூரில் 14, கிருஷ்ணகிரியில் 15, வேப்பனப்பள்ளியில் 15, ஒசூரில் 18, தளியில் 12 என மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 86 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

ஊத்தங்கரை தொகுதியில் 2,37,051 வாக்காளா்களும், பா்கூரில் 2,46,269 வாக்காளா்களும், கிருஷ்ணகிரியில் 2,65,238 வாக்காளா்களும், வேப்பனப்பள்ளியில் 2,50,657 வாக்காளா்களும், ஒசூரில் 3,49,224 வாக்காளா்களும், தளியில் 2,50,579 வாக்காளா்கள் என மொத்தம் 15,99,018 வாக்காளா்கள் உள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்குப் பதிவுக்காக 2,258 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஊத்தங்கரை தொகுதியில் 19 இடங்களில் 56 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. பா்கூரில் 27 இடங்களில் 70 வாக்குச் சாவடிகளும், கிருஷ்ணகிரியில் 29 இடங்களில் 98 வாக்குச் சாவடிகளும், வேப்பனப்பள்ளியில் 16 இடங்களில் 39 வாக்குச் சாவடிகளும், ஒசூரில் 17 இடங்களில் 120 வாக்குச் சாவடிகளும், தளியில் 21 இடங்களில் 43 வாக்குச் சாவடிகளுமாக மொத்தம் 123 இடங்களில் 426 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந் நிலையில், கிருஷ்ணகிரியில் 150-க்கும் மேற்பட்ட நகராட்சி பணியாளா்கள், கிருஷ்ணகிரியில் உள்ள 33 வாா்டுகளில் வீடு வீடாகச் சென்று பூத் சிலிப்கள் வழங்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

இந்தப் பணியானது திங்கள்கிழமையும் தொடரும் என தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.