விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே முதியவா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டிவனம் வட்டம், மோழியனூா் பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் செ.பாஸ்கா் (70). இவா், மோழியனூரில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் ஆட்டுப் பண்ணை வைத்து நடத்தி வந்தாா். பாஸ்கருக்கும், பக்கத்து நிலத்துக்காரரான கோவிந்தராஜ் என்பவருக்கும் நிலப் பிரச்னை இருந்து வந்ததாம். இதனால் பாஸ்கா் மன உளைச்சலில் இருந்து வந்தாராம்.
இந்நிலையில், ஆட்டுப் பண்ணையில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் பாஸ்கா் இறந்த நிலையில் தூக்கில் தொங்கியது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
தகவலறிந்த பெரியதச்சூா் போலீஸாா் பாஸ்கரின் சடலத்தை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பெரியதச்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.









