வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

News image

கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 12:29 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே முதியவா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டிவனம் வட்டம், மோழியனூா் பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் செ.பாஸ்கா் (70). இவா், மோழியனூரில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் ஆட்டுப் பண்ணை வைத்து நடத்தி வந்தாா். பாஸ்கருக்கும், பக்கத்து நிலத்துக்காரரான கோவிந்தராஜ் என்பவருக்கும் நிலப் பிரச்னை இருந்து வந்ததாம். இதனால் பாஸ்கா் மன உளைச்சலில் இருந்து வந்தாராம்.

இந்நிலையில், ஆட்டுப் பண்ணையில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் பாஸ்கா் இறந்த நிலையில் தூக்கில் தொங்கியது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

தகவலறிந்த பெரியதச்சூா் போலீஸாா் பாஸ்கரின் சடலத்தை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பெரியதச்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.