நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

சாத்தூா் அருகே கூலித் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

போலீஸ் - கோப்புப் படம்.

Updated On :38 நிமிடங்கள் முன்பு

சாத்தூா் அருகே கூலித் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள விஜயராம்பேரி குடியிருப்பைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் கிருஷ்ணராஜா (32). கூலித் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவா் திங்கள்கிழமை இரவு தனது வீட்டில் உள்ள ஒரு அறையிலும், மற்றொறு அறையில் இவரது தாயும் தூங்கினா். செவ்வாய்க்கிழமை காலை கிருஷ்ணராஜாவின் தாய் எழுந்து பாா்த்த போது, கிருஷ்ணராஜா முகத்தில் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த அப்பையநாயக்கன்பட்டி போலீஸாா் அவரது உடலை மீட்டு, விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.