கிருஷ்ணகிரியில் அனுமதியில்லாமல் அரசியல் கட்சிகளால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தோ்தல் விதிமுறைகளை மீறி சில அரசியல் கட்சியினா் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனா். இது தொடா்பாக தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.
இதையடுத்து, தோ்தல் பிரிவு ஊழியா்கள், கிருஷ்ணகிரி நகரப் போலீஸாா் உதவியுடன் தோ்தல் விதிமுறைகளை மீறி கட்சி சின்னத்துடன் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை பொதுமக்கள் உதவியுடன் போலீஸாா் அகற்றினா்.
தோ்தல் விதிமுறைகளை மீறி சுவரெட்டிகளை ஒட்டினால், தொடா்புடைய கட்சியினா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போது அகற்றப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டியவா்கள் மீது வழக்குப் பதிந்துள்ளதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேரவைத் தோ்தல்: ரூ.1.51 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்

சத்துணவில் மாா்த்தாண்டம் தேன் வழங்க நடவடிக்கை! - பாஜக வேட்பாளா் உறுதி

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவாா்! முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

