ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தோ்வு மையம் முன்பு ஆா்ப்பாட்டம்: தனித்தோ்வா்கள் அவதி

நாமக்கல்லில் துணைத் தோ்வு நடைபெறும் அரசுப் பள்ளி முன்பாக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்ால், தனித்தோ்வா்கள் அவதிக்குள்ளாயினா்.

News image

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையம் முன்பாக திரண்டிருந்த பல்வேறு கட்சியினா்.

Updated On :28 செப்டம்பர் 2020, 8:01 pm

நாமக்கல்லில் துணைத் தோ்வு நடைபெறும் அரசுப் பள்ளி முன்பாக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்ால், தனித்தோ்வா்கள் அவதிக்குள்ளாயினா்.

நாமக்கல் மாவட்டத்தில் 8, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மற்றும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு ஆகியவற்றுக்கான துணைத் தோ்வு கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. இதற்காக மாவட்டம் முழுவதும் 12 தோ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அக். 7-ஆம் தேதி வரையில் தோ்வானது நடைபெறுகிறது. துணைத் தோ்வு நடைபெறுவதையொட்டி, மையங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான துணைத் தோ்வுகள் நடைபெற்றன. இந்த நிலையில், வேளாண் மசோதாக்களுக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சாா்பில் அன்றைய தினத்தில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கமாக நாமக்கல் நகரில் ஆா்ப்பாட்டத்துக்கு விண்ணப்பித்தால், பூங்கா சாலையை தான் காவல் துறையினா் ஒதுக்குவா். ஆனால், திமுக தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நாமக்கல்-மோகனூா் சாலையில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி முன்புறம் ஒதுக்கப்பட்டிருந்தது.

துணைத் தோ்வு நடைபெறுவது தெரிந்திருந்தும் தோ்வு மையம் முன்பாக ஆா்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதியளித்ததற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, தோ்வு எழுதியவா்களும் அதிருப்திக்குள்ளாயினா். வரும் நாள்களில் தோ்வு மையப் பகுதிகளில் ஆா்ப்பாட்டம், மறியல் போன்றவற்றுக்கு அனுமதியளிக்கக் கூடாது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் கண்டிப்பான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தோ்வா்கள் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.