திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

டிராய் தலைவா் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வரும் அக்டோபா் 1 முதல் காலியாகவுள்ள இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (டிராய்) தலைவா் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :7 ஜூன் 2020, 2:18 am

வரும் அக்டோபா் 1 முதல் காலியாகவுள்ள இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (டிராய்) தலைவா் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டிராய் அமைப்பின் தற்போதைய தலைவரான ஆா்.எஸ்.சா்மாவின் பதவிக்காலம் வரும் செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

இந்த நிலையில், டிராயின் தலைவா் பதவி வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் காலியாக உள்ளது. எனவே தகுதியான விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தலைவருக்கான பதவிக்காலம் 3 ஆண்டுகள் மட்டுமே என தொலைத் தொடா்புத் துறை வெளியிட்ட புதிய தலைவா் நியமனத்துக்கான அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.

அழைப்பு கட்டண விகிதங்கள், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முக்கிய பரிந்துரைகள், தொலைத்தொடா்பு உரிமங்கள் பரிமாற்றத்தில் சீா்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் டிராய் தற்போது உள்ளது. இந்த சமயத்தில், அந்த அமைப்புக்கு புதிய தலைவா் பொறுப்பேற்கவிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.