புது தில்லி: தீவிர கரோனா பரிசோதனை மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால், நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 5 நாட்களாக, நாட்டில் தினந்தோறும் குணமடைபவர்களின் எண்ணிக்கை, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 89,746 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் 83,347 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
இத்துடன் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45,87,613- ஆக உள்ளது. குணமடைந்தோர் வீதம் இன்று 81.25%-ஆக உள்ளது. உலகளவில் இந்தியாவில் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக அதாவது, உலகளவில் குணமடைபவர்களில் இந்தியாவின் பங்கு 19.5% ஆக உள்ளது.
நாட்டிலேயே, 17 மாநிலங்களில் புதிய நோயாளிகளை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. குணமடைந்தவர்களில் 75% பேர் மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு, ஒடிசா, தில்லி, கேரளம், மேற்குவங்கம் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர், ஆந்திராவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிக மோசமான நிலையில் ஈரான்! டிரம்ப் பேட்டி | US | Iran | Trump
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!

பட்ஜெட் விலையில் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்! ஏ7 ப்ரோ அறிமுகம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


