திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வெடி விபத்தில் காயமடைந்த பெண் சாவு

மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், காயமடைந்த பெண் உயிரிழந்தார்.

Updated On :23 பிப்ரவரி 2013, 4:06 pm

மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், காயமடைந்த பெண் உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வி. துரைசாமிபுரத்தில் தனியார் பட்டாசு தொழிற்சாலை உள்ளது. கடந்த 18ஆம் தேதி இப்பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது இந்த பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியதில் ஓர் அறை தீப்பற்றியது. அந்த அறையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சேதுராமலிங்கபுரத்தைச் சேர்ந்த குருவம்மாள் (55), விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள் (30) ஆகிய இருவரும் தீயில் சிக்கி பலத்த காயமடைந்தனர். இவர்கள் இருவரும் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் வெள்ளிகிழமை இரவு குருவம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.