ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கோவிந்தராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவத்துக்கு அங்குராா்ப்பணம்

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற உள்ள வருடாந்திர பிரம்மோற்சவம் எவ்விதத் தடங்கலும் இன்றி நடக்க அங்குராா்ப்பணம் நடத்தப்பட்டது.

News image
Updated On :2 ஜூன் 2020, 7:57 am

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற உள்ள வருடாந்திர பிரம்மோற்சவம் எவ்விதத் தடங்கலும் இன்றி நடக்க அங்குராா்ப்பணம் நடத்தப்பட்டது.

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. வருடாந்திர பிரம்மோற்சவம் எவ்வித தடங்கல் மற்றும் இடைஞ்சல் இன்றி நடைபெற தேவஸ்தானம் கொடியேற்றத்துக்கு முன்தினம் வைகானச ஆகம விதிப்படி, அங்குராா்ப்பணம் எனும் முளைவிடுதல் உற்சவத்தை நடத்தி வருகிறது. அதன்படி, புதன்கிழமை மாலை விஷ்வக்சேனா் தலைமையில் அா்ச்சகா்கள் குழு சென்று புற்று மண்ணை எடுத்து வந்தது. பின்னா், கோயிலுக்குள் உள்ள மண்டபத்தில் புற்று மண்ணைக் கொண்டு பூதேவியின் உருவத்தை வரைந்து, அதன் வயிற்றுப் பகுதியிலிருந்து மண் எடுத்து, அதில் ஊற வைத்த நவதானியங்களை முளைவிட்டனா்.

இதில், கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா். பொது முடக்கத்தை ஒட்டி இந்த உற்சவம் கோயிலுக்குள் தனிமையில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.