சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

பாகிஸ்தானில் புதிதாக 799 பேருக்கு கரோனா

பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 799 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 308,217-ஆக அதிகரித்துள்ளது.

News image

பாகிஸ்தானில் புதிதாக 799 பேருக்கு கரோனா

Updated On :24 செப்டம்பர் 2020, 5:53 am

பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 799 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 308,217-ஆக அதிகரித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக பாகிஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 799 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 308,217-ஆக அதிகரித்துள்ளது.  7,388 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிதாக 8 பேர் உயிரிழந்ததால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,437-ஆக அதிகரித்துள்ளது.  கரோனா வைரஸ் தொற்றிலிருந்து 294,392 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 134,845 பேரும், பஞ்சாப் பகுதியில் 98,686 பேரும், கைபர் பதுன்க்வாவில் 37,470 பேரும், இஸ்லாமபாத்தில் 16,288-ஆகவும் அதிகரித்துள்ளது. பலுசிஸ்தானில் 14,765 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2,591 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42,29 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 3,306,515 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.