குகூள் நிறுவனத்தில் பணிபுரியம் ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்புவதற்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
கரோனா பரவலுக்கு மத்தியில் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு வீட்டிலிருந்து பணிபுரியம் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பெருந்தொற்று கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் குறைந்துள்ளது.
இந்நிலையில், குகூள் நிறுவனத்தில் பணிபுரியம் ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்புவதற்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வலைப்பதிவில், "டெல்டா வகை கரோனா பரவல் அதிகரித்துவருவது அலுவலகம் திரும்புவதை சிக்காலாக்கியுள்ளது.
எனவே, வீட்டிலிருந்து பணிபுரிவது அக்டோபர் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் திரும்ப எவரேனும் விரும்பினால் அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். ஒரிரு வாரங்களில், இந்த முறை அமெரிக்காவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. வரும் மாதங்களில் மற்ற நாடுகளுக்கும் இது விரிவு செய்யப்படவுள்ளது.
அந்தந்த நாடுகளின் தடுப்பூசி கையிருப்பின் அடிப்படையில் இந்த முறை அமல்படுத்தப்படும். இந்த நடவடிக்கைகள் அனைவருக்கும் மன அமைதியை ஏற்படுத்தும் என நம்புகிறேன்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிக மோசமான நிலையில் ஈரான்! டிரம்ப் பேட்டி | US | Iran | Trump
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!

பட்ஜெட் விலையில் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்! ஏ7 ப்ரோ அறிமுகம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


